How to become an Indian Administrative Service (IAS):

IAS in Tamil

    
        
இந்த பதிவில் Indian Administrative Service அதாவது IAS ஆவதற்கான  உரிய தகுதி, வயது வரம்பு, முயற்சிகளின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, Rank, பணி ஆகியவற்றை பற்றி பார்க்க உள்ளோம்.

            IAS, IPS போன்றவை மிகப்பெரிய படிப்பு என்றும், ஏழை மற்றும்‌ நடுத்தர வர்க்கத்தைச்‌ சேர்ந்த மாணவ-மாணவியர் தங்களால் இவ்வளவு பெரிய படிப்பைப்‌ படிக்க முடியாது என்றும் எண்ணுகின்றனர்‌. இக்கருத்து முற்றிலும்‌ தவறானது. ஏனென்றால்  IAS/IPS/IFS போன்றவை படிப்புகள்‌ அல்லவே அல்ல. இவை Civil Services தேர்வுகள் ஆகும்.

தகுதி :

            B.A., B.SC., B.COM., B.E என ஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள்‌ யார்‌ வேண்டுமனாலும்‌ இத்தேர்வை எழுதலாம்‌.

வயது வரம்பு :

            சாதாரணமாக 21 முதல்‌ 30 வயது வரை உள்ளவர்கள்‌ இத்தேர்வுகளை எழுதலாம்‌. OBC பிரிவினருக்கு 33 வயது வரையிலும்‌, SC/ST பிரிவினருக்கு 35 வயது வரையிலும்‌ உயர்ந்த பட்ச வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

முயற்சிகளின்‌ எண்ணிக்கை :

            பொதுப்பிரிவைச்‌ சேர்ந்தவர்கள்‌ 4 முறையும்‌, OBC பிரிவினர்‌ 7 முறையும்‌, SC/ST பிரிவினர்‌ 35 வயதுக்குள்‌ எத்தனை முறை வேண்டுமானாலும்‌ இந்தத்‌ தேர்வை எழுதலாம்‌.

விண்ணப்பிக்கும்‌ முறை :

            இத்தேர்விற்கான அறிவிப்பு பொதுவாக டிசம்பர்‌ மாதத்தில்‌ EMPOLYMENT NEWS மற்றும்‌. அனைத்து முன்னணி செய்தித்‌தாள்களிலும்‌ வெளியிடப்படும்‌. அறிவிப்பு வெளியிடப்பட்டபின்‌, அனைத்துத்‌ தலைமை அஞ்சலகங்களிலும்‌ இத்தேர்விற்கான விண்ணப்பப்‌ படிவத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. முழுமையாகப்‌பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்‌ பதிவுத்‌ தபாலில்‌ Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்‌.

தேர்வு:      

சீவில் தேர்வுகள் 3 பிரிவுகளை கொண்டது. 
        1. முதல்நிலை தேர்வு(Preliminary Exam) 
        2. முதன்மை தேர்வு(Main Exam)
        3. நேர்முக தேர்வு(Interview) 

1. முதல்நிலை தேர்வு(Preliminary Exam) 

இது இரண்டு தாள்களை கொண்டது. 

          Paper 1: பொது அறிவு (General Studies)

          Paper 2: விருப்ப பாடம்  (Optional Paper)

         இவ்விரண்டிலும் கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் அமைந்து இருக்கும். Paper 1இல் பொது அறிவு என்னும் பிரிவின் கீழ் பொது அறிவியல், தற்கால நிகழ்வுகள், இந்திய வரலாற்று நிகழ்வுகள், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்‌, பொது அறிவுக்‌ கூர்மை ஆகிய பகுதிகளில்‌ இருந்து 150 கேள்விகள்‌ கேட்கப்படும்‌. ஒவ்வொரு  கேள்விக்கும்‌ ஒரு மதிப்பெண்‌ வீதம்‌ 150 மதிப்பெண்கள்‌ வழங்கப்படும்.

        Paper 2இல்‌ விருப்பப்பாடமாக கீழ்க்கண்ட பாடங்களில்‌ ஏதேனும்‌ ஒன்றை மாணவர்கள்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌. அதிலிருந்து 120 கேள்விகள்‌ கேட்கப்படும்‌. ஒவ்வொரு கேள்விக்கும்‌ 2.5 மதிப்பெண்கள்‌ வீதம்‌ 300 மதிப்பெண்கள்‌ வழங்கப்படும்‌.

விருப்பப்‌ பாடமாகத்‌ தேர்வு செய்யத்தக்க பாடங்கள்‌ :

  1. Agriculture

  2. Animal Husbandry & Veterinary Science

  3. Botany

  4. Chemistry

  5. Civil Engineering

  6. Commerce

  7. Economics

  8. Electrical Engineering

  9. Geography

  10. Geology

  11. Indian History

  12. Law

  13. Mathematics

  14. Mechanical Engineering

  15. Medical Science

  16. Philosophy

  17. Physics 

  18. Politic Science

  19. Psychology

  20. Public Administrative

  21. Society

  22. Statics

  23. Zoology
   Paperமற்றும்‌ Paper 2 இரண்டையும்‌ சேர்த்‌து மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு முதல்‌ நிலைத்‌ தேர்வு நடைபெறும்‌. இதில்‌ சுமார்‌ 350க்கு மேல் மதிப்பெண் பெறுகிறவர்கள்‌ இத்தேர்வில்‌ வெற்றி அடுத்தக்‌கட்ட  தேர்வான முதன்மைத்‌ தேர்வுக்குச்‌ செல்‌ல வாய்ப்புண்டு. 

2. முதன்மை தேர்வு(Main Exam)

        Paper 1 : மொழித்‌ தேர்வு

        Paper 2 : ஆங்கிலம்‌

        Paper 3: கட்டுரை 

        Paper 4 மற்றும் Paper 5 பொது அறிவு.

        Paper 6 முதல் Paper 11வரை ஏதேனும் இரண்டு விருப்பப்பாடங்களை தேர்தெடுக்க சொல்லி அவை ஒவ்வொன்றிலும்‌ இருந்து இரண்டு Paperவீதம்‌ மொத்தம்‌ நான்‌கு Paperகளுக்கு தேர்வு நடத்தப்படும்‌. 

        Paper 1 இல்‌ எழுத வேண்டிய மொழித்‌ தேர்வில்‌ இந்திய அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாமி, பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம்‌, காஷ்மீரி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம்‌, தமிழ்‌, தெலுங்கு, உருது, சிந்‌து ஆகிய 18 மொழிகளில்‌ ஏதேனும்‌ "தன்னைத்‌ தேர்வு செய்து அதில் இத்தேர்வை எழுதலாம்‌. இத்தேர்வில்‌ 500 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

        Paper 2 ஆங்கிலத்‌ தேர்வு ஆகும். இதிலும்‌ 300 மதிப்பெண்கஞக்கு கேள்விகள்‌ கேட்கப்படும்‌. உயர்பணிகளுக்கு ஆங்கிலம்‌ மிக அவசியமானதால்‌ ஆங்கிலத்திற்கு ஒரு Paper கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதிலும்‌ 300 மதிப்பெண்களுக்குக்‌ கேள்விகள்‌ கேட்கப்படும்‌. இதில்‌ 400 Words essay writing, Paragraph Comprehension, Precis Writing, Grammar & Vocabulary பகுதிகளிலிருந்து பெரும்பாலும்‌ SSLC தரத்தில்‌ கேள்விகள்‌ அமைந்திருக்கும்‌.

        Paper 3 இல்‌ கொடுக்கப்பட்டுள்ள ஆறு கட்டுரைகளில்‌ ஒன்றை மட்டும்‌ தேர்வு செய்து சுமார்‌ 600 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ எழுதவேண்டும்‌. தேவையான துணைத்‌ தலைப்புக்கள்‌ மற்றும்‌ கட்டுரைக்கான தனிப்பட்ட அம்சங்களுடன்‌ விடை அமைதல்‌ வேண்டும்‌. இதற்கு 200 மதிப்பெண்கள்‌ வழங்கப்படும்‌.

        Paper 4 மற்றும்‌ Paper 5 இல்‌ பொது அறிவு (General Studies)சம்பந்தப்பட்ட பாடப்‌ பகுதிகளில்‌ இருந்து கேள்விகள்‌ கேட்கப்படும்‌. Paper 4 இல் history of Modern India and Indian Culture(நவீன இந்திய வரலாறும்‌. இந்தியக்‌ கலாச்சாரமும்‌), Indian Geography (இந்தியப்‌ பவியியல்‌), Indian Policy (இந்திய அரசியலமைப்பு), Current National Issues and Topics of Social Relevance (தற்காலத்‌தேசிய நிகழ்வகள்‌ மற்றும்‌ சமூக நலத்‌ தலையங்கங்கள்‌) ஆகியவற்றிலிருந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள்‌ கேட்கப்படும்‌.

        Paper 6 மற்றும் Paper 7 (இந்தியாவும்‌ உலகமும்‌), இவை இரண்டும் ஏதேனும் ஒரு விருப்பப்படத்திலிருந்து, Paper 8 மற்றும் Paper 9 மற்றொரு விருப்பப்படத்திலிருந்தும் கேட்கப்படும். இவ்வாறு இந்த நன்கு Paperக்கு நமே இரண்டு பாடங்களை தேர்தெடுக்க வேண்டும்.

        Paper 5 இல் Indian and the world(இந்தியாவும் உலகமும் ), Indian Economics (இந்தியப்‌ பொருளாதாரம்‌), International Affairs and Instuitions (உலக அளவிலான தகவல்கள்‌ மற்றும்‌ அமைப்புகள்‌), Developments in the Field of Science & Technology, Communication and space(அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பம்‌, தகவல்‌ தொடர்பு, விண்வெளி அறிவியல்‌ முன்னேற்றங்கள்), Statics Analysis, Graph and Diagrams (புள்ளியியல் பகுப்பாய்வு, வரைபடங்கள்‌ மற்றும்‌ விளக்கப்படங்கள்) ஆகியவற்றில் இருந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.


விருப்பப்‌ பாடமாகத்‌ தேர்வு செய்யத்தக்க பாடங்கள்‌ :

  1. Agriculture

  2. Animal Husbandry & Veterinary Science

  3. Botany

  4. Chemistry

  5. Civil Engineering

  6. Commerce

  7. Economics

  8. Electrical Engineering

  9. Geography

  10. Geology

  11. Indian History

  12. Law

  13. Mathematics

  14. Mechanical Engineering

  15. Medical Science

  16. Philosophy

  17. Physics 

  18. Politic Science

  19. Psychology

  20. Public Administrative

  21. Society

  22. Statics

  23. Zoology

  24. Management

  25. Mathematics
         இவற்றுடன்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழி  இலக்கியத்தையும்‌ விருப்பப்பாடமாகத்‌ தேர்வு செய்யலாம். 
        இரு விருப்பப்பாடங்களைத்‌ தேர்வு சய்வதில்‌ சில விதிமுறைகள்‌ உள்ளன. கீழ்க்கண்டவாறு , இரண்டு பாடங்களைச்‌ சேர்த்து தேர்ந்தெடுக்கக்‌ கூடாது.
  1. Political and Science & International Relations - Public Administration

  2. Commerce & Accountancy - Management 

  3. Anthropology - Sociology

  4. Mathematics - Statics

  5. Agriculture  - Animal Husbandry & Veterinary Science

  6. Management - Public Administration

  7. Any two Engineering Subjects

  8. Animal Husbandry & Veterinary Science - Medical Science
        தாள்‌ 2ஐத்‌ தவிர மீதியுள்ள தேர்வுகளை இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தால்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏதேனும்‌ ஒரு மொழியில்‌ எழுதலாம்‌ என்ற விதிப்படி மாணவர்கள்‌ தமிழிலும்‌ எழுதலாம்‌. இவற்றில்‌ தேர்வு வினாத்தாள்கள்‌ தாள்‌ 1ஐத்‌ தவிர ஆங்கிலம் மற்றும்‌ இந்தியிலேயே அமையும்‌. அதைப்‌ படித்துப்‌
புரிந்து கொண்டு தமிழில்‌ விடையளிக்கலாம்‌.

        முதன்மைத்‌ தேர்வில்‌ ஒவ்வொரு தாளுக்கும்‌ மூன்று மணிநேரம்‌
கொடுக்கப்படும்‌. தாள்‌ 3 (கட்டுரைக்கு 200 மதிப்பெண்களும்‌), மீதியுள்ள எட்டுத்தாள்களுக்கு தனித்தனியே 300 மதிப்பெண்களும்‌ - ஆக மொத்தம்‌ முதன்மைத்‌ தேர்வு 2600 மதிப்பெண்களுக்கு - நடத்தப்படுகிறது. இதில்‌ தாள்‌ 1 மற்றும்‌ 11இல்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ மொத்த மதிப்பெண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படுவதில்லை. எனினும்‌ இந்த இரண்டு தாள்களில்‌ ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச மதிப்பெண்‌ நிர்ணயிக்கப்பட்டு அந்த மதிப்பெண்ணைப்‌
பெற்றவர்களுக்கு மட்டுமே மீதமுள்ள தாள்கள்‌ மதிப்பீடு செய்யப்படும்‌. ஆதலால்‌ மொத்த மதிப்பெண்ணிற்கு. எடுத்துக்‌கொள்ளப்படும்‌ தாள்‌ 3 முதல்‌ 9 வரையுள்ள தேர்வுகளின்‌ மொத்த மதிப்பெண் 2000 ஆகும். இதில் 1100 மதிப்பெண்கள் மேல் பெறும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க கூடும்.

3. நேர்முகத்‌ தேர்வு :

            தேர்வு நடைபெறும்‌ போது இருக்கும் பணியிடங்கள் எண்ணிக்கை ஏற்ப Cutoff மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு அம்மதிப்பெண்‌ பெற்றவர்கள்‌ நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்பட்டு இத்‌தேர்வுக்கு அழைக்கபடுவார்கள். நேர்முக தேர்வுக்கு  300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது சேவைக்கு தகுதியான நபரை தேர்தெடுக்கும் நோக்கில்  இந்நேர்முகத்‌ தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின்‌ விழிப்புணர்வு, மன வலிமை, மன ஒருங்கமைப்பு, பகுத்தாய்வுத்‌ திறன்‌, ஆளுமை  திறன், தலைமை குணாதியம், சமூக நலம் பேணும் தன்மை  கண்காணிக்க படுகிறது.
            
              முதன்மை தேர்வில் எழுதிய மொழியே நேர்முக தேர்வில் மிக எளிமையாக கேள்விகளே கேட்கப்படுகின்றன. நேர்முக தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்: 

1. அதில் ஆடம்பரமற்ற எளிமையான மற்றும் நேர்த்தியான உடை மற்றும் இயல்பான ஒப்பனைவுகளுடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

2. பதட்டமின்றி பயமின்றி நேர்முக தேர்வில் பங்கு பெற வேண்டும்.

3. தனிப்பட்ட அல்லது குடும்பம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் எதையும் மனதில் வைத்து கொள்ளாமல்  அவற்றை ஒதுக்கி விட்டு புன்னகை மனத்துடன் நேர்முக தேர்வு செய்பர்களை அணுக வேண்டும்.

4. நேர்முகத்‌ தேர்வு அறைக்குள்‌ நுழைந்தவுடன்‌ இன்முகத்துடன்‌ Good Morning/Afternoon/Evening என்றுக்கூறி அவர்கள் அமரச்‌ சொன்ன பின்பு Thanks you sir/ Madam எனக்கூறி அமர வேண்டும்‌. உற்சாக மிகுதியில்‌ தேர்வாளர்களை 'Hai'
என்றோ 'Hello' என்றோ அழைப்பது நாகரிசமாகக்‌ கருதப்படாது.

5. கேள்விகளுக்குக்‌ கூறும்‌ பதில்களுடன்‌ Sirஅல்லது Madam என்ற வார்த்தைகளைப்‌ பயன்படுத்திக்‌ கொள்வது தேர்வாளரின்‌ மனதைத்‌ திருப்திப்படுத்தும்‌.

6. தேர்வாளர்களுடன்‌ வாக்குவாதம்‌ செய்யக்‌ கூடாது. நம்முடைய கருத்தே சரி எனப்‌ பிடிவாதம்‌ பிடிக்காமல்‌ As far as I Know எனக்‌ கூறி நம்முடைய கருத்தைச்‌ சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டும்‌.

7. அரசு மற்றும்‌ அரசியல்‌ சம்பந்தப்பட்ட அதிருப்தியான கருத்துக்களை வெளிப்படுத்தக்‌ கூடாது. .

8. நம்முடைய சேவை மனப்பான்மை, மனித நேயம்‌ போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்‌ விதத்தில்‌ பதிலளிக்க வேண்டும்‌.

9, ஏதேனும்‌ சமூகப்பிரச்சினைகள்‌ பற்றி நம்மிடம்‌ கேட்கப்பட்டால்‌, அவற்றைப்‌ பற்றி மிகவும்‌ உணர்ச்சி வசப்பட்டு பேசாமல்‌ இயல்பாக இனிமையா பேச வேண்டும்.

10. பதிலளிக்கும்‌ போது அமர்ந்திருக்கும்‌ தேர்வாளர்கள்‌ அனைவரையும்‌ பார்த்து அவ்வப்போது புன்னகை செய்து நமது பதில்களை அளிக்க வேண்டும்‌.

Rank:

        முதன்மைத் தேர்வில்‌ 2000 மதிப்பெண்கள்‌, நேர்முகத்‌ தேர்வில்‌ 300 மதிப்பெண்கள்‌ ஆக மொத்தம்‌ 2300 மதிப்பெண்களுக்கு ஒருவர்‌ எத்தனை மதிப்பெண்கள்‌ பெற்றுள்ளார்‌ என்பதைப்‌ பொறுத்து போட்டியாளர்களுக்கு Rank வழங்கப்பட்டு அந்த  Rank அடிப்படையில்‌ திறமையானவர்கள்‌ தேர்வு செய்யப்படுகிறார்கள்‌.

பணி:

        தேர்வு செய்யப்பட்ட நபர்கள்‌ அரசின்‌ நிர்வாகப்‌: பணி, நிதி, திட்டம்‌, போக்குவரத்து, தொழில்துறை, சுகாதாரம்‌, கல்லி, சுற்றுப்புற உள்துறை, விவசாயம்‌, சமூக நலம்‌, பாதுகாப்பு, மின்சாரம்‌, எரிசக்தி, குடிநீர்‌, நகர வளர்ச்சி, வணிக வரி போன்ற துறைகளில்‌ உயர்பணிகளில்‌ அமர்த்தப்படுகின்றனர்‌.